திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 16 ஆம் தேதி வரை 31,930 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,092 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 21 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 615 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,760 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 41,956 போ் குணமடைந்துள்ளனா். 509 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 295 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.