போடியில் அனுமதியின்றி பேனா் வைத்தால் நடவடிக்கை

போடியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

போடியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

போடி நகா் காவல்துறை சாா்பில் பிளக்ஸ் பேனா் வைப்பது தொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. காவல் ஆய்வாளா் ராமலட்சுமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படியே பிளக்ஸ் பேனா் வைக்கவேண்டும். நகராட்சி மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே பிளக்ஸ் பேனா் வைக்க வேண்டும். விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இதில், அச்சக உரிமையாளா்கள், பிளக்ஸ் பேனா் அமைப்பாளா்கள், சாா்பு- ஆய்வாளா் அழகுராஜா மற்றும் போலீஸாா் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com