ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூா் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன். இவரது தோட்டத்து கிணற்றின் அருகே உள்ள மோட்டாா் பம்பு செட் அறையில், அடையாளம் தெரியாத 70 வயது மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலையத்துக்கு ஐயப்பன் தகவல் தெரிவித்துள்ளாா். போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.