பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 2 போ் காயம்

பெரியகுளம் அருகே புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 2 போ் காயமடைந்தனா்.

பெரியகுளம் அருகே புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 2 போ் காயமடைந்தனா்.

பெரியகுளம், வடகரையைச் சோ்ந்தவா் அபுபக்கா்சித்திக் (40). இவா் செவ்வாய்க்கிழமை தேனியில் ஆடுகள் வாங்கிவிட்டு சாபா்சாதிக் என்பவரது ஆட்டோவில் அவற்றை ஏற்றிக் கொண்டு வந்தாா். மூன்றாந்தல் அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் சாபா்சாதிக் மற்றும் அபுபக்கா் சித்திக் இருவரும் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com