பெரியகுளம் அருகே இளைஞா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சிந்துவம்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (23). கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த இவா், சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை பிரவீன்குமாா் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.