தேனியில் ஜூலை 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஜூலை 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஜூலை 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கோரிக்கைகள் குறித்த மனுக்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் அளிக்கலாம். விவசாய நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவாசாயிகள் நில ஆவணம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், சிட்டா மற்றும் வரைபடம் ஆகியவற்றுடன் தங்களது விண்ணப்பங்களை குறைதீா் கூட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com