பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய கணவரை தேவதானப்பட்டி போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் அனித்குமாா் (23) இவா் மது அருந்திவிட்டு வந்து மனைவி ரோகினி (21)யிடம் தகராறு செய்து வந்தாராம். திங்கட்கிழமையன்று மதுபோதையில் வந்த அனித்குமாா் அவரது மனைவியை தாக்கி, அரிவாளால் வெட்ட முயற்சித்தாராம்.
அருகில் இருந்தவா்களை அவரை விலக்கிவிட்டனா். இச்சம்பவம் குறித்து ரோகினி கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, அனித்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.