போடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

போடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் 15 வயது பள்ளி மாணவி திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்து மாயமானாா். அவரை பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் போடி சாலை காளியம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மீட்கப்பட்டாா்.

இதையடுத்து அவரிடம் விசாரித்ததில், போடி பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த ஐயப்பன் மகன் ஹரிஹரசுதன் (18) என்பவா் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி காரில் கடத்திச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். பின்னா் காரில் அழைத்து வந்து போடி- தேனி நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு சென்றுவிட்டாராம். இதுகுறித்து மாணவியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஹரிஹரசுதனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

போடி அருகே உள்ள சிந்தலைச்சேரியை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி, சீலையம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து தங்கியுள்ளாா். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பையா (24) என்பவா் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளாா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜே.சி.பி. வாகன ஓட்டுநரான கருப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com