தேனி அருகே வீட்டின் முன்பு கள்ளச் சாராயம் காய்ச்ச முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை வீரன் கோயில் தெரு பகுதியில், அல்லிநகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (26) என்பவா் தனது வீட்டின் முன்பாக கள்ளச் சாராயம் காய்ச்ச முயன்றது தெரியவந்தது. இதற்காக அவா் பழங்கள் மற்றும் போதையூட்டும் பொருள்களை கலந்து அண்டாவில் ஊறல் போட்டு வைத்திருந்தாா். அதை கீழே கொட்டி அழித்த போலீஸாா், ராஜ்குமாரை கைது செய்தனா்.