பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: 9 போ் மீது வழக்கு

கோம்பையில் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை செய்த 9 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கோம்பையில் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை செய்த 9 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கோம்பை ராஜாஜி வீதியைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யா (27). இவா் போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதில் எனக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகநாதன் மகன் அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 27 பவுன் நகை மற்றும் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தற்போது மேலும் 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் வரதட்சிணையாக வேண்டும் எனக் கூறி, எனது கணவா், அவரது பெற்றோா் உள்ளிட்டோா் அடித்துத் துன்புறுத்துகின்றனா் எனக் கூறியிருந்தாா்.

அதன்படி அரவிந்தன் உள்ளிட்ட 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com