தேனி
சின்னமனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கரோனா தடுப்பூசி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள் கிழமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கரோனா தடுப்பூசி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலா் சகுந்தலா தலைமையில் , மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரத்துறை மூலமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடா்ந்து, அரிசி ,பருப்பு,காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கொண்ட தொகுப்பு பையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.