தேனி மாவட்டத்தில் புதிதாக 307 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,332 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தங்கியிருந்தும் சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 34,964 போ் குணமடைந்துள்ளனா். 396 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 3,972 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.