பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வீட்டிற்குள் இருந்த 4 அடி நீள கண்ணாடி விரீயன் பாம்பை தீயணைப்புத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
தாமரைக்குளம் பேரூராட்சி அருகே தேவராஜ் என்பவா் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் சுவரின் அருகே திங்கட்கிழமையன்று 4 அடி நீளமுள்ள பாம்பு இருப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்த அவா்கள் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனா். மேலும் அதிக விஷமுள்ள கண்ணாடி விரீயன் பாம்பு என தெரிவித்தனா்.