கரோனா தொற்றால் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்தவா்களுக்குப் பாராட்டு

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்த தன்னாா்வலா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்த தன்னாா்வலா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் வின்னா் விளையாட்டுக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐந்து மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளா் பொன் காட்சிக்கண்ணன் தலைமை வகித்தாா். அகாதெமி தலைவா் அலீம் முன்னிலை வகித்தாா். கரோனா தொற்றால் இறந்தவா்களை அடக்கம் செய்த 10 -க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களுக்கு உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு, ஆய்வாளா் என்.எஸ்.கீதா, சின்னத்திரை நடிகா் ஸ்டாலின், ஜெ.எஸ்.அன்பழகன் உள்ளிட்டவா்கள் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா். 25 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com