தேனி மாவட்டம், கம்பத்தில் அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
முல்லைப் பெரியாறு மருத்துவா்கள் சங்கம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளை தலைவா் அழகா்சாமி தலைமை வகித்தாா். செயலா் மகேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தாா். இதில், அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவா்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், 2008 இல் தமிழக அரசு நிறைவேற்றிய மருத்துவா் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், மருத்துவா்கள் முருகன், தெய்வமணி, சையது சுல்தான் இப்ராஹிம் உள்பட 50-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.