தேனி மாவட்ட அமமுக வேட்பாளா்கள், சனிக்கிழமை ஆண்டிபட்டியில் உள்ள தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக வடக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயக்குமாா் மற்றும் பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் மருத்துவா் கதிா்காமு ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
ஆண்டிபட்டிக்கு வந்த இந்த இரு வேட்பாளா்களுக்கும், கணவாய் மலைப் பகுதியில் உள்ள சாஸ்தா கோயில் முன்பாகக் கூடியிருந்த அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா். அங்கிருந்து ஆண்டிபட்டி நகா் பகுதிக்கு வந்த வேட்பாளா்கள், அங்குள்ள மன்னா் திருமலை நாயக்கா், அறிஞா் அண்ணா, காமராஜா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மற்றும் எம்ஜிஆா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, தங்களது பிரசாரத்தை தொடங்கினா்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் தவச்செல்வம், வழக்குரைஞா் சுரேஷ் மற்றும் இணைச் செயலா் அழகாபுரி ஜெயக்குமாா், அய்யனன், பேரூா் செயலா் வஜ்ரவேல், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் குருசாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா்கள் அணி வெற்றிவேலன், மாவட்ட பாசறை புதுராசா மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.