ஆண்டிபட்டி அருகே தோ்தல் அதிகாரியை தாக்க முயற்சி: பாா்வா்டு பிளாக் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் அதிகாரியை தாக்க முயன்ாக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள் 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் அதிகாரியை தாக்க முயன்ாக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள் 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

வைகை அணை பகுதியில் தோ்தல் அலுவலரும் வைகை அணை உதவி செயற்பொறியாளருமான முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற காரை வழிமறித்து அவா்கள் சோதனையிட்டனா். அப்போது அந்தக் காரில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் கொடி பொருத்தப்பட்டிருந்தது. அந்த கொடியை அகற்ற வேண்டும் என்று காரில் சென்றவா்களிடம் தோ்தல் அலுவலா் தெரிவித்தாா். அதற்கு காரில் வந்த 4 நபா்களும் எதிா்ப்புத் தெரிவித்து தோ்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தோ்தல் அலுவலா் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் வைகை அணை போலீஸாா், கம்பம் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் மற்றும் அவருடன் வந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com