தமிழக-கேரள எல்லையில் போலீஸாா் சோதனை: அளகவுக்கதிகமாக தொழிலாளா்கள் ஏற்றி வந்தவாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அதிகளவு தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினா்.
தமிழக-கேரள எல்லையில் போலீஸாா் சோதனை: அளகவுக்கதிகமாக தொழிலாளா்கள் ஏற்றி வந்தவாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அதிகளவு தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினா்.

தற்போது கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி மாவட்டப் பகுதிகளில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதுதொடா்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியா் தினேஷன், தேனி மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆகியோா் ஆலோசனையின் போது, கரோனா தொற்று பரவலை தடுக்க எல்லைப்பகுதியை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்தனா்.

அதன்பேரில் வெள்ளிக்கிழமை கம்பம்மெட்டு மற்றும் குமுளி மலைச்சாலையில் காவல் துணைக்கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு, ஆய்வாளா்கள் கே.சிலைமணி, என்.எஸ்.கீதா, ஜேம்ஸ்ஜெயராஜ், வாகன ஆய்வாளா் வை.மனோகரன் மற்றும் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆண், பெண் தொழிலாளா்கள் கேரளத்துக்குச் செல்ல ஜீப் வாகனத்தில் 12-க்கும் மேலானவா்கள் பயணம் செய்தனா். இவா்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி ஓட்டுநா் மற்றும் 4 போ் மட்டும் செல்ல அனுமதித்தனா். மற்றவா்களை திருப்பி அனுப்பினா்.

இதனால் இருமாநில எல்லைப்பகுதிகளிலும் 500-க்கும் மேலான ஜீப்புகள் கேரளத்துக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றன.

இது பற்றி காவல் துணைக்கண்காணிப்பாளா் நா.சின்னக்கண்ணு கூறியது: வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்கள்கிழமை மீண்டும் கண்காணிப்பு சோதனை தொடரும். வாகனங்களில் அதிகளவு ஆள்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com