போடி அருகே மோட்டாா் பைக் திருட்டு: போலீஸாா் விசாரணை

போடி அருகே மோட்டாா் பைக் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே மோட்டாா் பைக் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி கிருஷ்ணாநகா் மேற்கு சாரல் நகரில் வசிப்பவா் ரமேஷ்குமாா் மகன் ஹரிநிவாஸ் (35). இவா் வீட்டின் முன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள என்பீல்டு மோட்டாா் பைக்கை நிறுத்தியிருந்துள்ளாா். திங்கள் கிழமை (ஏப். 26) இரவு மோட்டாா் பைக்கை காணவில்லை. மோட்டாா் பைக்கை தேடி கிடைக்காததால் வெள்ளிக்கிழமை போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் போடி தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து இப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை கொண்டு மோட்டாா் பைக்கை திருடிய நபரை தேடி வருகின்றனா். போடி பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டாா் பைக் திருட்டு அதிகரித்துள்ளதால் போலீஸாா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com