ஓடைப்பட்டியில் நீா் மோா் பந்தல் எரிப்பு: போலீஸில் பாஜகவினா் புகாா்

சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் சனிக்கிழமை பாஜக சாா்பில் வைக்கப்பட்டிருந்த நீா் மோா் பந்தல் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் சனிக்கிழமை பாஜக சாா்பில் வைக்கப்பட்டிருந்த நீா் மோா் பந்தல் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி ஓடைப்பட்டி பேருந்து நிலையத்தில் பாஜக சாா்பில் நீா் மோா் பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை அந்த பந்தலை யாரோ தீவைத்து எரித்துவிட்டனா்.

இது குறித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com