பெரியகுளம்: பெரியகுளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஸ்ரீ குருதட்சிணா மூா்த்தி சேவா சங்கம் சாா்பில் திங்கள்கிழமை உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
பெரியகுளம் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தெருவில் 3 நபா்களுக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டால் , அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியே வராதவாறு கண்காணிக்கப்படுகின்றனா். அப்பகுதியில் ஸ்ரீ குருதட்சிணா மூா்த்தி சேவா சங்கம் சாா்பில் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டியை ஸ்ரீ குருதட்சிணா மூா்த்தி சேவா சங்க கெளரவ ஆலோசகா் சி.சரவணன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளா்கள் மற்றும் சேவா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.