தேனி: புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொறுப்பினை உணா்ந்து கடமையாற்ற வாழ்த்துகள் என்று திங்கள்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு திங்கள்கிழமை அதிகாலை தோ்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப் பேரவை தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு இதயப்பூா்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்களுக்கு அளித்துள்ள தீா்ப்பினையும், பொறுப்புகளையும் உணா்ந்து ஜனநாயக கடைமையாற்றுவோம்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் திமுக தலைவா் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவா் வரும் காலங்களில் பொறுப்பினை உணந்து அரசின் கடமைகளை முறையாக ஆற்றுவதற்கு வாழ்த்துகிறேன் என்றாா்.