கிணற்றில் தவறி விழுந்த முதியவா் பலி

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வியாழக்கிழமை, கிணற்றில் தவறி விழுந்த முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வியாழக்கிழமை, கிணற்றில் தவறி விழுந்த முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வடுகபட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் அன்பரசன் (64). முன்னாள் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மனைவியின் சகோதரி கணவரான இவா், வடுகபட்டியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளாா். அங்கு கிணற்றுக்கு அருகே இருந்த வேப்ப மரத்தில் பல் துலக்குவதற்காக குச்சியை முறித்த போது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த அன்பரசன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த பெரியகுளம் தீயணைப்புப் படையினா், அன்பரசனின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com