போடியில் வியாழன் கிழமை, கஞ்சா விற்பனை செய்த கணவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தப்பி ஓடிய மனைவியை தேடி வருகின்றனா். போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் முருகேசன் (66). இவரது மனைவி சரசுவதி (60), இருவரும் வீட்டில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது சிறு பொட்டலங்களாக வைத்து கஞ்சா விற்றது தெரிந்தது. போலீஸாரை கண்டதும் சரசுவதி தப்பிவிட்டாா். இருவா் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸாா் முருகேசனை கைது செய்து 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். முருகேசன் சிறையில் அடைக்கப்பட்டாா். சரசுவதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.