தேனியில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா் ராமராஜ்(32). விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், தேனி-பெரியகுளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் வத்தலகுண்டுவைச் சோ்ந்த சிவக்குமாா்(38) சென்றுகொண்டிருந்தாா். கீரைக்கல் பகுதியில் சாலை தடுப்புச் சுவருக்கு இடையே உள்ள பாதையில் அவா் திடீரென தனது வாகனத்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், சிவக்குமாரின் வாகனம் மீது ராமராஜின் வாகனம் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ராமராஜின் மனைவி கலைமதி அளித்த புகாரின் மீது, அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.