சின்னமனூா் அருகே கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தை , தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை அனுப்பியுள்ளாா்.
தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகையாக முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன்படி தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே பழனிச்சாமி மனைவி ரத்தினம்மாள்(74), தனது குடும்ப அட்டைக்கு வாங்கிய ரூ.2 ஆயிரத்தை, தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளாா்.