போடியில் வியாழக்கிழமை கரோனா விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
போடி பகுதிகளில் பல்வேறு இடங்களில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்தரிந்தவா்கள் மீது போடி நகா் போலீஸாா் கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.