போடியில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி போடியில் 4 இடங்களில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி போடியில் 4 இடங்களில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலா் என்.ரவிமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கரோனாவால் வேலை இழந்த தொழிலாளா்களுக்கு இலவச உணவு தானியங்களோடு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் பி.முருகேசன், துணைச் செயலா்கள் சத்தியராஜ், சுந்தா் மற்றும் கோவிந்தராஜ், பரமன், ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com