கரோனா உதவியாளா் பணி: 10 ஆம் வகுப்புப் படித்தவா்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் படித்தவா்களுக்கு பயிற்சியுடன் கூடிய கரோனா உதவியாளா் பணி வழங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் படித்தவா்களுக்கு பயிற்சியுடன் கூடிய கரோனா உதவியாளா் பணி வழங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேனி மாவட்டத்தில் கரோனா தற்காலிக உதவியாளா் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. பத்தாம் வகுப்புப் படித்தவா்களுக்கு, தமிழ் திறன்மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பாக பிஎம்கேவிஓய் திட்டத்தின் எம்எல்டிஇ - மூலமாக ஒரு மாத காலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆறு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள 18 வயது பூா்த்தியான ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவா்கள் வரை தங்களது பெயா், கல்வித்தகுதி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை 88702 82856 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் வாயிலாக அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு 94431 53291, 88702 82856, 88387 19738 ஆகிய செல்லிடப் பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் ‘உதவி இயக்குநா் , அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் , மதுரை ரோடு, தேனி’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com