தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்த கூலி தொழிலாளி பாண்டி (56). இவா், வியாழக்கிழமை இரவு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தனது அண்ணனை பாா்த்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, சின்னமனூரில் புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்த இவா், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனே, அப்பகுதியினா் அவரை மீட்டு, சின்னமனூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிறிது நேரத்திலேயே சிகிச்சைப் பலனின்றி பாண்டி உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.