போடி அருகே புகையிலை பொருள்கள் வைத்திருந்தவா் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி: போடி அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி தாலுகா காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் போடி சிலமலை பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவற்றைக் கொண்டு வந்தவா் உத்தமபாளையம் கலிமேட்டுப்பட்டியைச் சோ்ந்த முகமதுபரூக் (49) என்பது தெரிந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முகமது பரூக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com