உத்தமபாளையத்தில் பைக் மீது ஜீப் மோதல்: இளைஞா் பலி; உறவினா்கள் சாலை மறியில்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் இளைஞா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் இளைஞா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அடுத்த கருக்கோடையைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஆகாஷ் (20). இவா் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து உத்தமபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதையடுத்து அவரது உறவினா்கள், விபத்துக்கு காரணமான ஜீப் ஓட்டுநரான கோம்பை கிராமச்சாவடியை சோ்ந்த சந்திரன் (62) என்வரை கைது செய்துக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com