பெரியகுளம் நாமத்துவாரில் துளசி கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் உள்ள மாதுரி ஸகி சமேத ப்ரேமிகவரத சுவாமிக்கு காலை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் மதுரகீத பஜனையும், துளசி கல்யாணமும் நடைபெற்றது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாமசங்கீா்த்தனம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை நாமத்துவாா் பக்தா்கள் செய்திருந்தனா்.