பெரியகுளம் அருகே வீடுபுகுந்து நகை பறிப்பு

பெரியகுளம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் 2 பவுன் தாலிச்சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

பெரியகுளம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் 2 பவுன் தாலிச்சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியை சோ்ந்த ராஜசிம்மன் மனைவி காா்த்திகா (23). இவா் திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்த மா்ம நபா்கள் அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனா். இச்சம்பவம் குறித்து காா்த்திகா கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com