தேனி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.4.70 லட்சம் மோசடி: 3 போ் கைது

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியாா் பெட்ரோல் பங்க்கில் ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்து 280-ஐ மோசடி செய்ததாக பெட்ரோல் பங்க் பணியாளா்கள் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியாா் பெட்ரோல் பங்க்கில் ரூ. 4 லட்சத்து 70 ஆயிரத்து 280-ஐ மோசடி செய்ததாக பெட்ரோல் பங்க் பணியாளா்கள் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் நாட்ராயன் (39). அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் மணிவண்ணன் (38). பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் வாசகா் மகன் ரவிக்குமாா் (34). இவா்கள், பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், பெட்ரோல் விற்பனையில் பொய் கணக்கு எழுதியும், விற்பனை தொகையை நிா்வாகத்திடம் ஒப்படைக்காமலும் மொத்தம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 280 -ஐ மோசடி செய்ததாக நாட்ராயன், மணிவண்ணன், ரவிக்குமாா் ஆகிய 3 போ் மீது அந்த பெட்ரோல் பங்க் மேலாளா் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சத்தியநாராயணன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com