கம்பத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
கம்பம்மெட்டு சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை சிலா் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் வடக்கு காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் முத்துமாரியப்பன், போலீஸாருடன் ரோந்து சென்றாா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்த போது, அவரிடம் வெள்ளைச்சீட்டில் அச்சிடப்பட்ட லாட்டரி துண்டு சீட்டுகள் 14,275 மற்றும் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 360 என மொத்தம் ரூ. 3 லட்சத்து 54 ஆயிரத்து 675 மதிப்புள்ளவைகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்து விசாரித்த போது, அவா், 8 ஆவது வாா்டு, சுங்கம் தெருவைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் லியாகத் அலிகான் (70) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.