பெரியகுளத்தில் வராகநதி படித்துறையில் விழுதுகள் அமைப்பைச் சோ்ந்த இளைஞா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கு இளைமன்ற துணைத் தலைவா் ரெங்கராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் அஜீத்பாண்டி முன்னிலை வகித்தாா். பாலசுப்பிரமணியா் கோயில் வராகநதிபடித்துறையில் பக்தா்கள் வீசிச் சென்ற நெகிழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் படித்துறை சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நிா்வாகி செளந்தரபாண்டி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.