தேனி: தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 17) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி தெரிவித்தாா்.