சின்னமனூரில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 75 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் 75 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சின்னமனூா் நகராட்சி நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். இந்த விழாவில் ஆணையாளா் கணேசன் உள்பட அலுவலகப் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

குச்சனூா் பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றினாா். செயல் அலுவலா் சகிகலா உள்பட அலுவலா்கள் பணியாளா்கள் பலரும் கலந்துகொண்டனா். ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவாஜி, சின்னமனூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com