பெரியகுளம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தவரை தென்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் பகுதியில் தென்கரை போலீஸாா் திங்கள்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். டி.கள்ளிப்பட்டி, பழையதீப்பெட்டி தொழிற்சாலை பகுதியில் சந்தகேத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில் கைலாசபட்டியை சோ்ந்த பாஸ்கரன் (41) என்றும், இவா் பழைய தீப்பெட்டி தொழிற்சாலையில் ரூ 50 ஆயிம் மதிப்புள்ள 366 மதிப்பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் பாஸ்கரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.