சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இணையதள விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி, சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இணையதள விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி, சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்கையன்கோட்டை ரவுண்டாவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் சிவாஜி தலைமை வகித்தாா். அப்போது, கைப்பேசியில் இணையதள விளையாட்டுகளால் மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாவதைத் தவிா்க்க அந்த விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பழனிசாமி, ரவிச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com