ஆண்டிபட்டி அருகே சம்பந்தியை கத்தியால் குத்தியவா் கைது

ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில் சம்பந்தியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறில் சம்பந்தியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியை சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் சதீஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த பாஸ்கரன் மகள் ரோஸ்லீன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி இருவரையும் அழைத்து சமாதானம் பேசியுள்ளனா். அப்போது பாஸ்கரனுக்கும் அவரது மருமகன் சதீஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாஸ்கரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷை குத்த முயன்றுள்ளாா்.

இதனை சதீஷின் தந்தை ஜெயக்குமாா் தடுக்க முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஜெயக்குமாரின் காலில் கத்தி குத்து விழுந்தது. இதில் காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இது குறித்தப் புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com