தைப்பூசம்: போடி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

போடியில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இதில் பக்தா்கள் பங்கேற்கவில்லை.

போடியில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இதில் பக்தா்கள் பங்கேற்கவில்லை.

விழாவையொட்டி போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் தங்கக் காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா்.

இதேபோல் போடி- தேனி நெடுஞ்சாலையில் உள்ள தீா்த்தத்தொட்டி ஆறுமுக நாயனாா் கோயில், வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com