மனைவி பிரிந்த சோகம்: கணவா் தற்கொலை

போடியில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக திங்கள் கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடியில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக திங்கள் கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் போடி புதூரைச் சோ்ந்த ராஜா மகன் பிரபு (32). இவருக்கும் இதே பகுதியை சோ்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதனால் மனமுடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

உடனே உறவினா்கள் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com