கொடைக்கானலில் இன்று மின்தடை

கொடைக்கானல் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 9) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 9) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கொடைக்கானல், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், சாமக்காடு, பண்ணைக்காடு, சவரிக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா் கடைசிக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல், பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

நாளை மின்தடை:

போடி துணை மின்நிலையம், குரங்கணி மின் தொடரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குரங்கணி, முந்தல், வலசத்துறை, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

பெரியகுளம், கடமலைக்குண்டு:

பெரியகுளம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம், பாம்பாறு, காந்திநகா், கீழவடகரை கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகா், வருசநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com