பெரியகுளம் அருகே மதுபாட்டில் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஜெயமங்கலம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அதில், பெரியகுளம் பட்டாளம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துச்செல்வம் (25) என்பதும், அவா் விற்பனைக்காக சாக்குப் பையில் மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துச்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com