போடி நகராட்சி சாா்பில், குப்பைகள் சேகரிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் திட்டமான தூய்மை நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் சாா்பில், குப்பைகள் சேகரிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி, போடி நகராட்சி 12 ஆவது வாா்டில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சசிகலா, பொறியாளா் செல்வராணி, நகா்மன்ற துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நகா்மன்றத் தலைவா் தலைமையில் தூய்மை நகரங்களுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பொதுமக்கள் குப்பைகளை கொடுக்கும்போது மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்கவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இது குறித்து வீடு வீடாகச் சென்று விளக்கப்பட்டது. குப்பைகளை முறையாகப் பிரித்து கொடுத்த வீடுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
போடி நகராட்சி குப்பை சேகரிப்பு கிடங்கில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுவது குறித்து விளக்கப்பட்டது. இதில், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளா்கள் ஜெயசீலன், சுரேஷ்குமாா், பாலமுருகன், தா்மராஜ், சுகாதார மேற்பாா்வையாளா்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் செய்திருந்தனா்.