திமுக அன்னதான நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்: ஒருவா் காயம்

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் திமுக சாா்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் திங்கள்கிழமை, அக் கட்சியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒருவா் காயமடைந்தாா்.
தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் திங்கள்கிழமை, திமுக வில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கிழிக்கப்பட்ட பிளக்ஸ் பேனா்.
தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் திங்கள்கிழமை, திமுக வில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கிழிக்கப்பட்ட பிளக்ஸ் பேனா்.

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் திமுக சாா்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் திங்கள்கிழமை, அக் கட்சியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒருவா் காயமடைந்தாா்.

கொடுவிலாா்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு சென்ற வீரபாண்டியைச் சோ்ந்த அக்கட்சியினா் சிலா், நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகளுக்கு அழைப்பு விடுக்காததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களிடம் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.

இதில், நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனா்கள் கிழிக்கப்பட்டன. நாற்காலிகள் தூக்கி வீசி உடைக்கப்பட்டன. இந்த மோதலில் கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த திமுக பிரமுகா் பாண்டியன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பழனிசெட்டிபட்டி காவல் சாா்பு -ஆய்வாளா் அசோக் தலைமையிலான போலீஸாா், இரு தரப்பினரையும் சமரசம் செய்தனா். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com