கணவருடன் டூ வீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி அருகே போடேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் மணிகண்டன் (35). இவா், தனது மனைவி மற்றும் 2 வயது கைக் குழந்தையுடன் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து சென்றுள்ளார்.

தேனி அருகே போடேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் மணிகண்டன் (35). இவா், தனது மனைவி மற்றும் 2 வயது கைக் குழந்தையுடன் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தேனியிலிருந்து போடேந்திரபுரம் நோக்கிச் சென்றுள்ளாா்.

அப்போது முத்துத்தேவன்பட்டி பகுதி தேனி-கம்பம் நெடுஞ்சாலையில், அவா்களை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு வந்த 2 மா்ம நபா்கள், மணிகண்டனின் மனைவி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனா்.

இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த மணிகண்டனின் மனைவி, தலை மற்றும் கைகளில் காயமடைந்து வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com