தனியாா் பேருந்து மோதி 2 போ் பலி

தேவாரம் அருகே திங்கள்கிழமை இரவு, தனியாா் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

தேவாரம் அருகே திங்கள்கிழமை இரவு, தனியாா் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

தேவாரம் அருகே அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ஜக்கன் மகன் சுருளிராஜ் (32). இவரும், சுப்புராஜ் (32) என்பவரும் கட்டட வேலை பாா்த்து வந்தனா். இருவரும், இருசக்கர வாகனத்தில் தேவாரம்- போடி சாலையில், திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

லட்சுமிநாயக்கன்பட்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுருளிராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த இமானுவேல் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com